வெள்ளி, 6 மார்ச், 2009

ஊர்தி மிதக்கும் கடல்

கரு நீலப் புடவையில்
அவளிலிருந்து அலையடிக்கும் நீலக்கடல்
மிதக்கும் ஊர்திக்குள்
மீனாகும் நான்
வெளி தேடி வாலால் கண்ணாடி உடைத்தேன்
கொட்டிய ரத்ததில்
வழுவழுப்பான உடல் சோர்ந்தேன்
கரையில் துடித்தவேளை
நிகழ்காலத்தில் அவள் கூச்சலிடுகிறாள்
நீலப் புடவையில் நுரை ததும்பதலில்
என் நம்பிக்கைகள் பளபளப்பக்கின்றன
ஒன்று கடலுக்குள் மூழ்குதல்
மற்றொன்று கரையில் விம்முதல்
இவற்றிற்கிடையே அல்லாடும் மனம்
கழியும் நாட்கள்
பொய்யாய் மிதந்த ஊர்தி
மீனாகிய நான்
கடலாகிய கரு நீலப்புடவை .

1 கருத்து:

சென்ஷி சொன்னது…

அழகான கவிதை. தங்களை பதிவுலகில் காணக் கிடைத்தது மகிழ்ச்சி.